search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரமத்திவேலூர் லாரி டிரைவர் மரணம்"

    பரமத்திவேலூர் அருகே லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மாயவன் (வயது 47). லாரி டிரைவர். இவர் பரமத்திவேலூர் லாரி அசோசியேசன் பெட்ரோல் பங்க்கில் டீசல் அடைத்து விட்டு லாரியை எடுக்க முயன்றார். அப்போது திடீரென மாயவன் மயங்கி விழுந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    ×